Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, May 24, 2018

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட 100 நாட்களாக போராடி வந்த தூத்துக்குடி மக்கள், 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மகஜர் வழங்க பேரணியாக வந்தபோது, பேரணியை தடுக்கும் நோக்கில் நடைபெற்ற தமிழக காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 11 பேர் பலியாகினர். 

இந்த அராஜகத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் 23.05.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, 23.05.2018 அன்று எடப்பாடியில் நமது விரிவடைந்த செயற்குழுவை துவக்குவதற்கு முன்பு , தொலைபேசி நிலையத்தில், சேலம் மாவட்ட சங்கம் சார்பாக, ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தினோம். மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன் தலைமை தாங்க, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி கண்டன பேருரை வழங்கினார்கள். 

மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், கண்டன முழக்கங்களை எழுப்பினார். 100க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்