Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 24, 2018

துணை டவர் நிறுவனம் அமைப்பதை அனுமதியோம்!



BSNL ஊழியர்கள் மற்றும அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்த தொலை தொடர்பு துறையும் அரசாங்கமும் வேகமாக செயல்பட்டு வருவதாக தெரிய வருகிறது. 

BSNLன் வளர்ச்சியை இந்த துணை டவர் நிறுவனம் தடுத்துவிடும் என்பதால், நாம் இந்த துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றோம். BSNLஐ பலவீனப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் அரசு இறுதி முயற்சியாக BSNLன் 70,000 டவர்களை அதனிடம் இருந்து பறித்து, நிறுவனத்தை  முடமாக்க பார்க்கிறது. 

BSNLன் உயிர் மூச்சு அதன் டவர்கள்தான். அந்த டவர்கள் BSNLஇடம் இருந்து பறிக்கப்பட்டது என்று சொன்னால் BSNL வெறும் எலும்புக்கூடாக மாறிவிடும். துணை டவர் நிறுவனத்தின் CMDஆக ஒரு IAS அதிகாரியை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது. கண்டிப்பாக இது BSNL இயக்குனர் குழுவின் கீழ் செயல்படாது. நமது நிறுவனத்தை பலவீனப்படுத்த, அரசாங்கம் செய்யும் சதி தான் இந்த துணை டவர் நிறுவனம்.

எனவே, BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திட 27.03.2018 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்துள்ளன. 

அதன்படி, நமது மாவட்டத்தில், 27.03.2018 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து சங்க மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் என  பெரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன் 
E . கோபால்,
கன்வீனர், AUAB