Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, May 27, 2015

மத்திய சங்க செய்திகள் - 2

Image result for bsnleu chq LOGO

இந்தியாவில் அகன்ற அலைவரிசை இணைப்புக்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ITI இரண்டாண்டு கல்வித்தகுதி உள்ள தோழர்கள் எந்த பாடப்பிரிவை  எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும்,  9020 சம்பள விகிதத்தில் நியமனம் செய்யப்பட்ட 5ஆண்டுகள் சேவை உள்ள  SPORTS ASSISTANTS விளையாட்டு வீரர்களும்   TTA இலாக்காத்தேர்வு எழுதலாம் என BSNL தலைமையகம் விளக்கமளித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக பெறப்பட்ட பட்ட வகுப்புகள் செல்லாது எனவும் BSNL விளக்கமளித்துள்ளது. 

GPF முன்பணம் வழங்குவது உள்ளிட்ட 
அனைத்து  GPF சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் DOT CELLக்கு அனுப்பிட வேண்டும் என DOT  நமது  BSNL  உருவான 15 ஆண்டுகளுக்குப்பின் பிரச்சினையை எழுப்பியுள்ளது.  முன்பணம் வழங்கும் அதிகாரம் DOT க்கு சென்றுவிட்டால் மேலும் பிரச்சினைகள் உருவாகும்என்பதில் சந்தேகமில்லை.

மருத்துவபில்கள் பட்டுவாடா செய்வதில் கடும் தாமதம் நிலவுவதால் பல மருத்துவமனைகள் BSNL ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்குகின்றன. நமது ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தரமுள்ள மருத்துவமனைகளின் பில்களை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

01.06.2015 முதல் நமது GPF நிதியிலிருந்து பணம் WITHDRAWAL செய்தால் வரி பிடித்தம் செய்யப்படும் (TDS ) என மத்திய அரசு 21.05.2015 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அணைத்து மத்திய சங்கங்களும் இதை கடுமையாக எதிர்த்துள்ளது. 

7.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு அளிப்பதற்கான இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 30 மாத நிலுவைத்தொகையும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும். 

01.06.2015 முதல் சேவை வரி SERVICE TAX 12.36 சதத்திலிருந்து 14சதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை தனியாக வசூல் செய்யப்பட்ட கல்வி வரி தற்போது 14 சத வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

25.05.2015 அன்று நடை பெற்ற FORUM கூட்டத்தில், இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையான "இலவச அழைப்பு வசதியை" மக்களிடம் தீவரமாக பிரசார படுத்தி தரை வழி இணைப்புகளை அதிகப் படுத்துவது. அதற்காக, 08.06.2015 முதல் 07.07.2015 வரை ஒரு மாதம் பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்