Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, February 1, 2015

FORUM சார்பாக மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம் - 30.01.2015




30.01.2015 அன்று கடலூரில் FORUM சார்பாக மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம் வெகு விமர்சையாக நடை பெற்றது. தேசத்தையும், நிறுவனத்தையும் காப்பதற்காக FORUM சார்பாக நடைபெறும் இயக்கங்களின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. 

BSNLEU தமிழ் மாநில தலைவர் தோழர் S. செல்லப்பா உள்ளிட்ட அனைத்து சங்க மாநில தலைவர்களும் கூட்டு தலைமை ஏற்றனர்
NFTEBSNL கடலூர் மாவட்ட செயலர் தோழர் ஸ்ரீதர் வரவேப்புரை வழங்கினார். 

தமிழ் மாநில செயலர்கள் தோழர் A. பாபு ராத கிருஷ்ணன்,(BSNLEU), R. பட்டாபிராமன், (NFTEBSNL), R. கோபிநாதன், (SNEA),  K. சிவகுமார்,(AIBSNLEA), P. அழகுபாண்டியராஜா, (SNATTA) ஆகியோர் கருத்துரை வழங்க,

BSNLEU பொது செயலர் தோழர் P. அபிமன்யு, NFTEBSNL பொது செயலர் தோழர் C. சந்தேஸ்வர் சிங், SNEA பொது செயலர் தோழர் K. செபாஸ்டீன், AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர் P. வேணு கோபால், ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

தமிழ் மாநில FORUM அமைப்பிற்க்கு 9 லட்சம் கையெழுத்துக்கள் என்பது இலக்கு. அதன்படி முதல் தவணையாக மேடையிலேயே 1 லட்சத்தி 60 ஆயிரம் கையெழுத்துக்கள் அகில இந்திய தலைவர்களிடம் வழங்கப்பட்டன. 

மாநிலத்திலேயே (அநேகமாக அகில இந்திய அளவிலேயே) நமது சேலம் மாவட்ட FORUM தான் 50,000 கையெழுத்துக்கள் வழங்கி அதிக படியான கையெழுத்துக்கள் வழங்கிய மாவட்டம் என்ற பெருமையை பெற்றது. 

இறுதியாக BSNLEU கடலூர் மாவட்ட செயலர் தோழர் K.T. சம்பந்தம், நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

மாநிலம் முழுவதுலிமிருந்து சுமார் 1500 ஊழியர்கள் / அதிகாரிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக மட்டும் 68 தோழர்கள் கலந்து கொண்டோம்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், சிறப்பான ஒரு இயக்கம் நடத்தி சாதனை படைக்க உதவிய அனைத்து தோழர்களுக்கும், FORUM தலைவர்களுக்கும், சேலம் மாவட்ட FORUM சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

தோழமையுடன், 
E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU 
மற்றும் கன்வீனர், FORUM .