Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, August 1, 2014

மாமனிதர்- தோழர் சுர்ஜித் நினைவு நாள்-Aug-1 (1916-2007)



1964ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழுஉறுப்பினராகச் செயல்பட்டு வந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித், 1992ம் ஆண்டில் சென்னையில்நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் பொதுச் செயலாளராகத்தேர்ந் தெடுக்கப்பட்டார்.அவர் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய 1992-2004ம் ஆண்டுக்காலத்தில் கட்சியின் பெருமையையும்புகழையும் இந்திய அரசியல் அரங்கில் வெகுவாகஉயர்த்தினார்.குறிப்பாகஅமெரிக்க எகாதிபத்தியத்தின் சதிச் செயல்களுக்கெதிராக,இந்துத்துவா மதவெறியர்களுக்கெதிராகபிற்போக் காளருக்கெதிராக நாட்டு மக்களை ஒன்றுபடுத்துவதில்ஜனநாயகக் கட்சிகளைத் திரட்டுவதில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.மதவாதக் கட்சிகள் மற்றும் அதன் பரிவாரங்களுக் கெதிராகமதச்சார்பற்றஜனநாயகச் சக்திகளை திரட்டுவதில் அவர் ஆற்றிய பங்கின் விளைவாகத்தான் ஐக்கியமுற்போக்குக் கூட்டணி மத்திய ஆட்சியில் அமர்ந்துள்ளது என்பதை யாரும் மறக்கமுடியாது.நாட்டின் இறையாண்மைபொருளா தாரச் சுயசார்புபொதுத்துறை பாது காப்புசிறுபான்மை மக்களின் உரிமைபோன்றவற்றிற்காகதொழிலாளி வர்க்கத்தின்விவசாயி மக்களின் நலன் காக்க அவர் எழுப்பிய முழக்கம் இன் றும் நமது செவிகளில்ஒலித்துக் கொண் டிருக்கிறது.
பிரகாஷ் காரத் அவரது பணியை சுட்டிக் காண்பிக் கிறார்.“கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில்சுர்ஜித்சர்வதேச வர்க்கசக்திகளின் சேர்மானம் மாறி யிருந்த புதிய நிலைமைக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் கட்சியின் முயற்சிகளுக்குதலைமை தாங்கி வழிகாட்டினார்சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து எவ் வித சிராய்ப்பும் இன்றி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்ததானது அவருடைய தலைமைக்கு சான்று பகரும்புதிய நிலைமைகளையும்சாவல்களையும்சந்திக்கும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அதனுடைய கட்சித் திட்டத்தை மேம்படுத்தியதுஇந்த மேம் படுத்தப்பட்டதிட்டத்தின் நகலை தயாரித்த திட்ட குழுவிற்கு சுர்ஜித் தலைவராக இருந்தார்.“தோழர் சுர்ஜித்தின் பங்கானதுகட்சித் தலைவர்என்பதைவிட மிகவும் விரிந்ததாகும்.
அவருடைய தாக்கம் தேசிய மட்டத்தில் உணரப்பட்டது.கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறை யில் அவர்,பாரதிய ஜனதா கட்சியை தூரத்தில் வைப்பது என்ற கட்சியின்நடைமுறைக் கொள்கை வழியை நிறைவேற்றும் பொறுப்பில்வைக்கப்பட்டார்அவரு டைய ஓய்வறியா முயற்சிகளின்காரண மாகத்தான் 1996ம் ஆண்டில் ஐக்கிய முன்னணிஅரசாங்கத்தை உருவாக்கும் பொருட்டு காங்கிரசல்லாதமதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாகத் திரட்டப்பட்டன.“முன்னதாக,அவர் 1989ம் ஆண்டில் வி.பி.சிங் தலைமை யில் தேசியமுன்னணி அரசாங்கம் அமைக்கப்படுவதில் முக்கியப்பங்காற்றினார்பாபர் மசூதி தகர்க்கப்பட்ட இருண்டகாலகட்டத்தில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளாலும் ஒருதேசியத் தலைவரின் கருத்துக்கள் மரியாதையுடன் கேட்கப்பட்டதென்றால் அது தோழர் சுர்ஜித்தினுடையதுதான்இந்துத்துவாசக்திகளின் தாக்குதலைச் சந்தித்து மதச்சார்பின்மைக் கொடியை உயர்த்திப் பிடித்ததற்காக நாடுஅவருக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறது.
(என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளமாமனிதர் சுர்ஜித் என்ற நூலிலிருந்து)